ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் சிக்கி 1733 பேர் உயிரிழப்பு!

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த விபத்துகளில் சிக்கி ஆயிரத்து 733 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேநேரம் வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறும் வானக சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு – சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor