சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு!

மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ஆகியோர் தலைமையில் இன்று (07) தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor