அதி வேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கான அறிவிப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை- அக்குரஸ்ஸ மாத்தறை பிரதான வீதி ஜெயந்தி பாலத்திற்கு அருகில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், தெற்கு அதிவேக வீதியின் பாலட்டுவ வெளியில் இருந்து மாத்தறை நோக்கி இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மாத்தறை நோக்கி பயணிக்க விரும்பினால் கபுதுவ வெளியேறும் வாயிலில் இருந்து வெளியேறி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கபுதுவ நுழைவு வாயிலில் நுழைந்து கொடகம வெளியேறும் வாயிலில் இருந்து வெளியேறி மாத்தறை நோக்கி செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor