இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கஜேந்திரகுமார் எம்.பி. பங்கேற்பு

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.

இந்த மாநாடு (2023 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் திகதி) நேற்று நடைபெற்றது.

அத்துடன் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புக்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்தினார்.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) கன்சர்வேடிவ் உறுப்பினர்களையும் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம்  சந்தித்தார்.
தமிழர்களுக்கான கன்சர்வேடிவ் வரவேற்பு நிகழ்வில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று, அங்கிருந்த கன்சர்வேடிவ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் செயற்பாட்டாளர் கள் முன்னிலையில் உரையொன்றையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிகழ்த்தினார்.

Recommended For You

About the Author: S.R.KARAN