சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு கோடியே இருபத்தாறு இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் அவர்கள் சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை டுபாயில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்த எப்.இஷெட்.569 என்ற விமானத்தில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor