யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு ஆரம்பம்

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை- 06.00 மணியளவில் அதன் பயிற்சி பிரிவின் இணைப்பாளர் வ.யோகநாதன் தலைமையில் ஆரம்பமானது.

பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் வித்தியா பிரசாத் கலந்து கொண்டு பேசினார்.

சனி, ஞாயிறு தினங்களிலும், அரச விடுமுறை தினங்களிலும் காலை-06.00 மணிமுதல் காலை-08.00 மணி வரை நடைபெறும் இவ் வகுப்புக்களில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ள முடியும்.

சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியைப்  பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

Recommended For You

About the Author: S.R.KARAN