இளைஞர்கள் குழுவினால் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சர்ஜன்ட்

நிகவெரட்டியவில் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் இளைஞர்கள் குழுவினால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகவெரட்டிய பன்சியகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கசிப்பு வியாபாரி ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
அத்தோடு சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதனையடுத்து இளைஞர் குழு பொலிஸை சரமாரியாக தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்காளாகிய பொலிஸ் சர்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor