யாழில் இருந்து சென்ற பேருந்து விபத்திற்குள்ளானது!

குருணாகலில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்களான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்தும் அதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இடம் பெற்ற விபத்து
யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியில் சென்றவர்கள் ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த குழுவினர் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor