காலையில் அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அத்திப்பழமானது உடலுக்கு பல விதமான நன்ம்மைகளை தருகிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் உள்ள பல நோய்களை எளிதில் குணமாக்குவதில் சிறந்த மருந்தாக அத்தி பழம் விளங்குகிறது.

மேலும், அத்திப்பழத்தை காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் உலர்த்தி பொடி செய்து, பாலில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இதயம் வலிமை அடையும். உணவை எளிதில் ஜீரணம் செய்யவும், சுறுசுறுப்பை தந்து, பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல் நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.

பின்னர், அத்திப்பழம் சாப்பிட்டு வருவதால் வாய் துர்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளரும். அத்துடன் அத்தி காய்களில் இருக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவிவர வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

தொடர்ந்து, தினசரி காலை, மாலை என 5 அத்திப்பழம் சாப்பிட்டு பால் அருந்தினால் நரம்பு தளர்ச்சி நீங்கி தாது விருத்தியடையும்.

ஆண் மலட்டுத்தன்மையை நீக்குவதற்கும், போதைப்பழக்கம் மற்றும் இதர நோய்களிலிருந்து குணமாக்கவும் அத்திப்பழத்தை ஒரு வாரம் வினிகரில் ஊறவைத்து தினமும் இரண்டு பழங்கள் வீதம் உண்ண வேண்டும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உணவிற்கு பிறகு அத்தி விதைகளை சாப்பிடலாம். அத்திப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

Recommended For You

About the Author: webeditor