தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தேவையுடையவர்களுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் விசேட தேவையுடையவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கக்கூடிய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விசேட தேவையுடையவர்களுக்கு புதிய வாக்குச் சீட்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recommended For You

About the Author: webeditor