உடற்பயிற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படை சிப்பாய் உயிரிழப்பு!

உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திடீரென சுகயீனமடைந்த கடற்படை சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே குறித்த சிப்பாய் கடற்படையில் இணைந்துகொண்டதாக கூறப்படுகின்றது.

வவுனியா பூனேவ கடற்படை முகாமையில் இணைந்துகொண்ட, அனுராதபுரம், திறப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த நிமந்த டில்ஷான் தயாரத்ன என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

புதன்கிழமை (30) அன்று காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்தார்.

அவரை பூனே கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor