தான் கற்ப்பித்த பாடசாலையில் திருடிய ஆசிரியர் கைது!

பதுரலிய பிரதேசத்தில் தான் கற்பித்த பாடசாலையிலேயே மாணவர்களுக்குரிய பொருட்களை திருடிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுரலிய பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட உயர்தரப் பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடிய பொருட்கள்
பாடசாலையின் அலுவலக அறையை உடைத்து 40 அங்குல தொலைக்காட்சிப் பெட்டி, அம்ப் மற்றும் மல்டிமீடியா புரொஜெக்டரை அவ் ஆசிரியர் திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுரலிய கெலிங்கந்த கனிஷ்ட கல்லூரியில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலத்சிங்கல, படகலகந்த அமரகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: webeditor