யாழில் இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகள்

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சிறப்பாக நடைபெற்றன.

யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (15-08-2023) காலை 9 மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி, துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN