கழிப்பறைக்குள் சென்று சுவருக்குள் சிக்கிக் கொண்ட மாணவி!

களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயதான சிறுமியை சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

சுவருக்குள் சிக்கிகொண்ட சிறுமியை களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரே மீட்டுள்ளனர்.

சுவருக்குள் சிக்கிக்கொண்ட மாணவி
களுத்துறை – கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

பள்ளியின் கழிவறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே சிறுமி சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து , களுத்துறை மாநகர தீயணைப்புத் துறையின் அவசர ஆம்புலன்ஸ் வந்து அதிநவீன கருவியின் உதவியுடன் இரண்டு சுவர்களைத் தள்ளி காப்பாற்றியதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor