சீனக்குடா விமானப்படைத் தளத்தள விபத்தில் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பயிற்றுவிற்பவரும் பயிற்சியாளரும் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை விமானப்படையின் சீனக்குடாவில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT 6 ரக விமானமே 11:27 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானம் முற்றாகத் தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor