யாழ் வடமராச்சியில் ஆறு பேர் கைது!

வடமராட்சி மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில் சவுக்கமரங்களை வெட்டிய 6 பேரை யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மணற்காட்டு பகுதியில் சவுக்கமரங்கள் வெட்டப்படுவதாக யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரப்படையினர் 6 பேரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து வெட்டப்பட்ட சவுக்குமர குற்றிகளுடன் துவிச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றிய நிலையில் சிலர் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தப்பியோடியவர்களை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor