34 ஆவது வீரமக்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு 

34 ஆவது வீரமக்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) 34 ஆவது வீரமக்கள் தினம் இன்றைய தினம் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவாலயத்தில் நடைபெற்றது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ஆர்.இராகவன் ஈகச்சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

சம நேரத்தில் உயிரிழந்த தோழர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள், தோழர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Recommended For You

About the Author: S.R.KARAN