பாதாள உலக உறுப்பினராகக் கருதப்படும் துனுமல சரத் சுட்டுக் கொலை!

பாதாள உலக உறுப்பினராகக் கருதப்படும் துனுமல சரத் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப் வண்டியில் பயணித்த போது இன்று (14) காலை வரகாபொல பகுதியில் வைத்து இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor