வைத்தியரின் கார் மோதியதில் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பிலிருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த வைத்தியரின் கார் வீதியோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த யுவதியை மிஓதியதில் காயமடைந்த யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் வெண்டிக்கோணர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார்
கொழும்பிலிருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு வருகைத்தந்த வைத்தியர் ஒருவரின் காரொன்றே சீரற்ற காலநிலையால் பனிமூட்டம் நிறைந்து காணப்பட்டமையால் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் பயணித்த 25 வயதான யுவதியை மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வீதியில் நடந்து சென்ற பெண் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதிக்குச் சென்ற நானுஓயா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor