மருதடியானுக்கு விமோசனம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் கடந்த ஆறு ஆண்டுகளாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பெறுநர் குழு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.


இந்நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபைக்கான தேர்தல் 25. 06. 2023 அன்று நடைபெற்றது.


அந்தத் தேர்தலில் தர்ம கர்த்தா சபை உறுப்பினர்களாக 7 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதற்கேற்ப இன்று 01. 07. 2023 காலை 8.00 மணியளவில் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் பிரதேச செயலகத்தின் ( பிரதேச செயலர் திருமதி யசோதா) பெறுநர் குழுவிடமிருந்து புதிய தர்ம கர்த்தா சபைத் தலைவர் தம்பிராசா தர்பாகரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடம் வைபவ ரீதியாக அனைத்து பொறுப்புக்களும் கையளிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN