புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமிக்கப்பட உள்ளார்.

நாளைய தினம் உதேனி ராஜபக்ச எயர் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டு விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்.

இதன்போது இவர் கம்பஹா பண்டாரநாயக்க ஆரம்ப மற்றும் இடைநிலை கல்லூரிகளிலும், ஆனந்தா கல்லூரியினதும் பழைய மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் பட்டம் பெற்றுக் கொண்டு, விமானப் படை விமானியாக பணியில் இணைந்து கொண்டுள்ளார்.

மேலும் இராணுவத்தின் பல்வேறு விமானங்களை உதேனி ராஜபக்ச செலுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor