காலி முகத்திடலில் கடுமையாகும் கட்டுப்பாடுக்கள்

கொழும்பு- காலி முகத்துவாரப்பகுதியில் , சுமார் 150 யாசகர்களின் நடமாட்டம் மக்களுக்கு கடும் இடையூறாக மாறியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காலி முகத்துவாரப் பகுதியில் யாசகர்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் துறைமுக அதிகாரசபை மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்து புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.

யாசகர்களுக்கு தங்குமிட வசதி
அதற்கமைய, யாசகர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளையும் உணவையும் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் சமூகப் பாதுகாப்புச் சேவையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor