சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடாத்திய பிரதேச சபை உறுப்பினரை தேடும் பொலிசார்!

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் திவுலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பதுராகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு அதிகாரிகள் QR குறியீடுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோதே இவர்கள் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்வதற்காக பல தடவைகள் அவரது வீட்டுக்குச் சென்றபோதிலும் அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor