யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், வடக்கு கிழக்கு தலைநகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் பங்களிப்புடனான முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இன்று காலை 8:30 மணியளவில் திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று மாணவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கான அரிசி மற்றும் விறகினை பெற்று திருகோணமலை சிவன்கோவிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்றது.

தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து பொதுமக்களிற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பெற்றது.

 

Recommended For You

About the Author: webeditor