ஈச்சமோட்டையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு உதவித் திட்டங்கள்

யாழ் ஈச்சமோட்டையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு !

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஈச்சமோட்டையை சொந்த இடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நன்கொடையாளர் திரு வேலுப்பிள்ளை சிவபாலசுப்பிரமணியம்(ஈச்சமோட்டை பாலன்) அவர்கள் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு பூமணி அம்மா அறக்கட்டளை ஊடாக நாற்பது வறிய நிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொருட்களும் பதின்மூன்று வறிய நிலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுக்கான பணத் தொகையினையும் கற்றல் உபகரணங்களையும் வழங்கி உதவினார்.

மேற்படி நிகழ்வானது 02/05/2023 அன்று ஈச்சமோட்டை சனசமூக நிலையத்தில் அதன் செயலாளர் குமாரசாமி விஜயகுமார் தலைமையில் நடைபெற்றதோடு சனசமூக நிலைய தலைவர் திரு பரமசாமி சிறீதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ கலாநிதி ந.விந்தன் கனகரட்ணம்(ஜே.பி),ஆலோசகர் இ.மயில்வாகனம் (ஜே.பி) நிரவாகசபை உறுப்பினர் சா.தவசங்கரி (பொறியிலாளர்)ஆகியோர் பயணாளிகளுக்கு உதவிகளை வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: webeditor