இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை ஈட்டிதர தயாராகும் வாழைப்பழம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது.

அம்பிலிபிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் அதிகளவு வாழைப்பழம் செய்கை இடம்பெறுவதால் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு இரண்டு வாழைப்பழம் பதப்படுத்தும் வலயங்களை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது விவசாய அமைச்சின் கீழ் விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், செவனகல மற்றும் எம்பிலிபிட்டிய வாழை விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இரண்டு வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமத் திட்டங்களை நிறுவுவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, செவனகல பிரதேசத்தில் கேவன்டிஷ் வாழை இனத்தையும், அம்பிலிபிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் புளிப்பு வாழை இனத்தையும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தோட்டங்களும் முதற்கட்டமாக 200 ஏக்கரில் 400 ஏக்கரில் பயிரிடப்பட்டு, பின்னர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தில் 800 ஏக்கராக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

பதப்படுத்தல் நடவடிக்கை
இதேவேளை, யாழ்.புளிப்பு வாழை திட்டத்தை இயற்கை பயிராக ஊக்குவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் முதலாவது கரிம புளிப்பு வாழை அறுவடை எதிர்வரும் சில நாட்களில் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

அறுவடை மற்றும் பதப்படுத்தல் நடவடிக்கை இன்று (03.05.2023) காலை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராஜாங்கனை புளிப்பு வாழை திட்டத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் துபாய் சந்தைக்கு 12,500 கிலோ புளிப்பு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து வாரந்தோறும் 25,000 கிலோகிராம் கரிம புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அத்துடன் எம்பிலிப்பிட்டிய மற்றும் செவனகல புளிப்பு வாழை மற்றும் கேவன்டிஷ் வாழை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வாழை ஏற்றுமதி பதப்படுத்தும் நிலையத்தை பரவகும்புக அல்லது அதனை அண்மித்த பிரதேசங்களில் நிறுவ விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை வழங்கியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor