இலங்கை மக்களுக்கு இந்திய விசா தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இந்திய இ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடியான இணையத்தளங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அறிவிக்கும் விசேட ஆலோசனை ஒன்றை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

மேலும், சில போலி/ மோசடியான இணைய உரலிகள் (URL) இந்திய இ-விசாவை வழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor