யாழ் மூளாய் பகுதியில் ஆண் ஒருவர் மீது கொடூர தாக்குதல்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் ஆணொருவரை சில நபர்கள் கூரிய ஆயுத்தால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம் (29-04-2023) மூளாப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் மூளாய் பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும், தாக்குதலை மேற்கொண்டவர்கள் மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது.

அப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான நிலைமை காணப்பட்டது.

தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor