சீனாவின் உதவியுடன் இலங்கையில் புதிய வீடமைப்பு திட்டம்!

சீன உதவியுடன் கொழும்பில் வசதி குறைந்தவர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த புதிய வீடமைப்புத் திட்டத்திற்காக சீனாவினால் 450 மில்லியன் டாலர்கள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

05 இடங்களில் வீடுகள்
கொழும்பில் 05 இடங்களில் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சசின் செயலாளர், டபிள்யூ. எஸ். சத்யானந்தா குறிப்பிட்டார்.

இதன் கீழ் 1,995 வீடுகள் கட்டப்படவுள்ளதுடன், அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இத்திட்டம் நிறைவடையும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: webeditor