திருகோணமலையில் பாரிய விபத்து!

திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஏழாம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்றைய தினம் (28-04-2023) இடம்பெற்றுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது குழந்தை உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக சிகிச்சைகளுக்காக 3 வயதான குழந்தையும், தந்தையும் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor