முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது!

முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (26.04.23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதுமூன்று படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor