இலங்கையில் அச்சத்தை ஏற்ப்படுத்திய தொடர் கொலைகள்!

காலி-அக்மீமன பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடலில் வெட்டு காயங்கள்
குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டத்திற்கு தேயிலை பறிப்பதற்காக நேற்று முன்தினம் (25)சென்ற போது இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தில் கழுத்து உட்பட பல பகுதிகளில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிசிரிவி காட்சிகள்
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் சிசிரிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor