பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயன்ற போதகர்

பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை போதகர் எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அத்தோடு இக் குற்றச்சாட்டில் சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த போதகர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான போதகர் 15 வயதான மாணவி ஒருவரிடம் பல சந்தர்ப்பங்களில் நிர்வாணமாக வட்ஸ்அப் காணொளி அழைப்புகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor