கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

தாமரை கோபுரம் இலங்கையின் மிகவும் உயரமான கோபுரமாக திகழ்ந்து வருகின்றது. மேலும் இது நாட்டின் அடையாளமாக அழைக்கப்படுகிறது.

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரிலிருந்து “தாமரை” நீக்கி, அதன் பெயரை “கொழும்பு கோபுரம்” என மாற்றுவதற்கான பிரேரணை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உயரமான கோபுரத்திற்கு தாமரை என்ற பெயர் ஏற்புடையதல்ல என்பதே பெயரை மாற்றக் காரணம் என கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor