யாழ் நெடுந்தீவு குறிக்கட்டுவான் படகுச் சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தம்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

விசேட பொலிஸ் படை – தடயவியல் பொலிஸார் விசாரணை
ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

நெடுந்தீவு பகுதியில் இன்று (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொடூர சம்பவத்தை புரிந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor