நுணாவில் ஐ.ஓ.சியில் விவசாயிகளுக்கு இன்றைய தினம் டீசல் விநியோகம்!

பெரும்போக நெற்பயிர்ச் செய்கையை முன்னிட்டு உழவுஇயந்திரங்களுக்கு தேவையான டீசல் நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்புநிலையத்தால் வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய தென்மராட்சி பிரதேசத்திலுள்ள உழவு இயந்திரங்களுக்கு தேவையான டீசல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை வழங்கப்படவுள்ளது

கியூ.ஆர் கோட் அடிப்படையில் டீசல் விநியோகம்
எனவே தென்மராட்சி பிரதேசத்திலுள்ள உழவு இயந்திரங்களை வைத்துள்ள விவசாயிகள் தத்தமது கமக்கார அமைப்புகள் ஊடாக விபரங்களை வழங்குமாறு நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கியூ.ஆர் கோட் அடிப்படையிலேயே இந்த டீசல் விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor