யாழ்.நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன தெய்வீக திருக்கூட்ட நிகழ்வு!

நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் முன்னெடுக்கும் தெய்வீக திருக்கூட்டம், நேற்று, யாழ்ப்பாண நல்லை ஆதீன கலா மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் பா.தனபாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அருளுரை மற்றும் ஆசியுரையை தொடர்ந்து, யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் ம.நிரேஷ்குமார், சிறப்புரையை நிகழ்த்தினார்.

இதன் போது, பருத்தித்துறை பிரதேச செயலக திக்கம் மடத்துவாசல் சித்தி விநாயகர் அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

Recommended For You

About the Author: admin