யாழ்/குருநகர் புனித றோக்ஸ் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி

வருடாந்த மெய்வன்மைத் திறனாய்வுப் போட்டி.! யாழ்/குருநகர் புனித றோக்ஸ் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மெய்வன்மைத் திறனாய்வுப் போட்டியானது 30/03/2023 அன்று பி.ப 1.30 மணியளவில் ஆரம்பித்து பாடசாலையின் மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் பாடசாலையின் முதல்வர்,

திரு யோ.எட்வின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது,இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு மரியதாஸ் கியூமன்(சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்,பிரதேச செயலகம் தெல்லிப்பளை)அவர்களும்,கெளரவ விருந்தினராக,திரு அருளப்பு றொபின்சன்,ஆசிரியர் யாழ்/செட்டித்தெரு மெ.மி.த.க பாடசாலை)ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி,போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்து நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: webeditor