தாயை படுகொலை செய்த இராணுவ வீரர் கைது!

அனுராதபுரம் – கெபித்திகொல்லேவ – ஐத்திகேவெவ பகுதியில் தாயை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 ஆண்டுகளுக்கு பின்னர், இராணுவ வீரரான அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் கடந்த 2015 ஜூன் 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது,

மேலும் இச்சம்பவத்தில் 50 வயதான பெண் தனது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பட்டத்தக்கது.

பின்னர் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இராணுவ வீரரான மகனே கொலையாளி என தெரியவந்தது.

இதன்படி, கட்டுநாயக்க இராணுவ முகாமில் பணியாற்றிவந்த, சந்தேகநபரான மகனை விசேட பொலிஸ் குழுவொன்று கைது செய்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor