தற்கொலை செய்து கொண்ட மாணவி

விக்கிரவாண்டி அருகே தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன். கூலித் தொழிலாளி. இவரது மகள் கயல்விழி (வயது 17). இவர் திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி வந்தார். இந்த நிலையில் வீட்டில் கயல்விழி தேர்வுக்காக படிக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இதனை அவருடைய தாய் சரளா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த கயல்விழி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor