ஜெர்மனியின் முக்கிய நகரொன்றில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்

ஜெர்மனியில் பெர்லின் பெண்களும் மேலாடை இன்றி இருப்பதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் அறிவித்துள்ளமையானது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

பெர்லினில் உள்ள பொது நீச்சல் தடாகங்களிலேயே இந்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. திறந்த நீச்சல் தடாகம் ஒன்றில் மேலாடை இன்றி சூரிய குளியலில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக அந்தப் பெண் சட்ட உதவியை நாடியதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையடுத்து அவர் செனட்டின் புகார் அலுவலகத்தில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க கூடாது. விருப்பப்பட்டால் ஆண்கள் போன்று பெண்களும் மேலாடையின்றி குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட ரீதியாக அனுமதி கிடைத்துள்ளது.

அவருக்கு மட்டுமல்ல பெர்லின் நகரில் பெண்கள் மேலாடையின்றி பொது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெர்லின் அதிகாரிகள் பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து, பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் இனி மேலாடையின்றி குளிக்க உரிமை பெற்றுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இந்த அனுமதி எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் இல்லை. இருப்பினும், இந்த அனுமதி வியப்பை தந்தாலும், இந்த முடிவிற்கு பலர் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor