இலங்கையில் மோசடியில் ஈடுபட்டு தமிழகத்திற்கு தப்பி ஓடிய நபர் கைது !

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி 23 பேரிடம் பணமோசடி செய்து, தமிழகத்துக்கு அகதியாக தப்பி சென்ற இலங்கை நபருக்கு எதிராக இராமநாதபுரம் எஸ்.பி.யிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் உட்பட 23 பேர் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று பிழைக்க எண்னியுள்ளனர்.

தமிழகத்திற்கு கம்பி நீட்டிய சந்தேகநபர்
இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரிடம் தலா ஆறு இலட்சம் வீதம் 23 பேர் பணம் கொடுத்து தங்களை எப்படியாவது ருமேனியா , அவுஸ்திரேலியா, கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

23 பேரிடம் தலா ரூ 6 இலட்சம் வீதம் பெற்றுக் கொண்ட ஜனார்த்தனன் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாது, சுருட்டிய பணத்துடன் தமிழகத்திற்கு கம்பி நீட்டியுள்ளார். சட்டவிரோதமாக தமிழகத்திற்கு அகதியாக படகு மூலம் தப்பித்து தனுஷ்கோடிக்கு சென்று தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் சந்தேகநபர் அகதியாக தங்கி இருக்கிறார்.

இந்நிலையில் ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை பெற்று தர வேண்டும் என பணம் கொடுத்து ஏமாந்த ஜெயக்குமார் என்பவர் விமானம் மூலம் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சென்று மண்டபம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் ஜெயக்குமார் அளித்த புகார் மீது பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று (13) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் குற்றச் செயல்கள் புரிந்து விட்டு அகதிகள் போர்வையில் தமிழகத்துக்கு தப்பிசெல்லும் சம்பங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor