வேலணையில் ஊரி அகழ்வுக்கு அனுமதி

யாழ்.ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பணிப்பு – வேலணையில் ஊரி அகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து ஆராய்வு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னாய்த்த கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வேலணை பிரதேசத்தில் ஊரி அகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கையை துறைசார் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் வேலணை பிரதேச சபையின் உள்ளக வீதி உள்ளிட்ட அபிவிருத்திக்காக ஊரியின் தேவைப்பாடு அதிகரித்து காணப்பட்டபோதும் அதற்கான அனுமதி அன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் தற்போது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக பொறுப்பெற்றுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேலணை பிரதேச சபையின் செயலாளர் தியாகச்சந்திரன் தெரியப்படுத்தியிருந்ததுடன் பிரதேச உள்ளக வீதிகள் மற்றும் தேவைப்பாடுகளை குறிப்பாக ஊரி வழங்கப்படாமையால் பல அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன் ஊரியை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்நிலையில் செயலாளரின் கோரிக்கையின் அவசிய தேவைப்பாட்டை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகரிகளுக்கு அத்தியாவசிய தேவை கருதியதான தேவைப்பாடுகளுக்கு ஊரியை வழங்க அனுமதிக்குமாறு பணித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (08.03) சம்பந்தப்பட்ட திணைக்களங்களான கனியவளத்திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கமநலசேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம், வேலணை பிரதேச சபை போன்றவற்றின் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் புங்குடுதீவு, வேலணை, அல்லைப்பிட்டி, மண்டைதீவு போன்ற பிரதேசங்களுக்கு கூட்டாக களவிஜயம் செய்து ஊரி பெறுவதற்கு சாதகமான தன்மைகள் தொடர்பாக ஆராயப்பட்டது

இதேநேரம் கடந்த ஒருங்கிணைப்பு குழு காலத்தில் வேலணை பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக அரசியல் நோக்கங்களை காரணங்காட்டி ஊரி அகழுதல் முற்றாக தடுக்கப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN