யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று இடம்பெற்றது

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது.

மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

கல்லூரியின் பதில் அதிபர் திருமதி தி.வதனி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலி. மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு பிராந்திய தொற்றுநோய் தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் வி. விஜிதரன் (பழைய மாணவன்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை கணித ஆசிரியர் செல்வி சி.மார்க்கண்டு, பழைய மாணவன் செ.சுகுமாரன் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor