பத்து வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்

பத்து வயது பாடசாலை மாணவியை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு அவ் ஆசிரியருக்கு 46 வயது என பொலிஸார் தெரிவித்துள்ளனர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் ​வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor