இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ச்சியாக ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.

இலங்கைக்கு ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தந்துள்ளனர்.

மேற்குலக நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கை, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor