மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த மாணவி பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் செவ்வாய்க்கிழமை (28) இரவு சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் குருணாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி டி சில்வா என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாகவும் அவர் சில காலமாக மன அழுத்தத்தினால் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor