ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த நபரொருவர் சுட்டுக்கொலை!

ஆஸ்திரேலிய நாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 32 வயதான இந்தியர் ஒருவர் நேற்றைய தினம் (28-02-2023 பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர் பெயர் முகமது ரகமத்துல்லா சையது அகமது என்றும், தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் கூறியுள்ளனர்.

சையது அகமது நேற்றைய தினம் (28-02-2023) சிட்னி மேற்கு ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இருந்து 2 பொலிஸார் அவரை நெருங்கி வந்தனர். அப்போது அவர்களையும் அகமது தாக்க முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து பொலிஸார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அகமதுவின் நெஞ்சில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

Recommended For You

About the Author: webeditor