சுற்றுலா துறைக்கு தனியாக எரிபொருள் நடைமுறை!

சுற்றுலாத்துறைக்கு அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதி QR குறித்து இன்று காலை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் மேற்படி முறைமை பற்றி அமைச்சர் கூறினார்.

ஒரு தொலைபேசி எண் மூலம் பல வாகனங்களைப் பதிவு செய்தல், சிறப்புத் தேவைப் பிரிவை உருவாக்குதல், வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளுக்கான QR முறைமை அறிமுகம் உட்பட பல விசேட யோசனைகள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டன.

Recommended For You

About the Author: webeditor