இரவில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நமது அன்றாட சமையலில் தேங்காய் பயன்படுத்தாத நாட்கள் மிகவும் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சுத்தமான கலப்படமில்லாத ஒரு உணவுப்பொருள் என்றால் அது தேங்காய்தான் .

இந்த தேங்காய் மூலம் பல வீடுகளில் தினம் காலையில் தேங்காய் சம்பல் , தேங்காய் புட்டு ,தேங்காய் பால் என்று விதம்விதமாக எமது சமையலில் தேங்காய்க்கு என ஓர் தனி இடமுண்டு.

தேங்காயில் ஏராளமான நன்மையுண்டு ,தேங்காய் சாப்பிடுவதால் நம் உடல் பெரும் நன்மைகள் கிடைக்கின்றன.

இரவில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
1.சிலருக்கு தீராத மல சிக்கல் இருக்கும் ,அவர்கள் இரவு தூங்கும் முன் தேங்காயை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து , மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும்.

2.சிலருக்கு தூக்கமின்மை பிரச்சினை இருக்கும் .அப்படி பட்டவர்கள் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தேங்காய்ப்பால் சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்

3.தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது.

4.சிலருக்கு முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் தேங்காய் சாப்பிடுவது இந்த பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

5.தேங்காய் சாப்பிடுவதால் உடல் எடையும் குறையுமாம்

Recommended For You

About the Author: webeditor